Monday, April 29, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது!

Monday, April 29, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் கீ இதனை உறுதி செய்துள்ளார்.
பிரித்தானியா மஹாராணி அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்பார் எனவும், இந்த அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும், இதுவரையில் எந்தவொரு உறுப்பு நாடும் அமர்வுகளை முழுமையாக புறக்கணிக்கப்பதாக உத்தியோகபூர்வ பகிரங்க அறிவிப்பை வெளியிடவில்லை.

No comments:

Post a Comment