Wednesday, April 10, 2013
இலங்கை::இந்தநிலையில், இலங்கைக்கு வந்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்திய திரைப்பட கலைஞர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு நாளை சமய பிராத்தனை நிகழ்வொன்றை இலங்கை கலைஞர்களின் தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவரும், நடிகையுமான மாலின் பொன்சேகா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர்களின் திரைப்படங்கள் இலங்கையில் திரையிடப்படக் கூடாது என்று தாம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சிரேஷ்ட ஆலோசகர் ரி.வி.சென்னன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தற்போது நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, அவர் தென்னிந்திய திரையுலகத்தினர் தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்றும் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment