Thursday, April 11, 2013

இலங்கை தூதரக அதிகாரி கமிஷனருடன் சந்திப்பு!

Thursday, April 11, 2013
சென்னை::இலங்கை துணை தூதர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து பேசினார். சென்னை, ஸ்டெர்லிங் சாலையில், இலங்கை துணை தூதரகம் உள்ளது. துணை தூதர் பதவி தற்போது, காலியாக உள்ளது. இந்த நிலையில், இலங்கை துணை தூதர் ( பொறுப்பு) அமீர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை, நேற்று மதியம், 12:30 மணிக்கு சந்தித்து பேசினார். சென்னை கென்னத் சாலையில் உள்ள புத்த மடம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள துணை தூதரகத்தின் பாதுகாப்பு, சென்னைக்கு வரும் இலங்கை பயணிகளின் பாதுகாப்பு குறித்து, கமிஷனருடன் அவர் பேசியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment