Monday, April 15, 2013

புலிகளின் செயற்பாட்டாளர்களை பின்தொடரும் சர்வதேச பொலீசார்-அதிர்ச்சி தகவல்!

Monday, April 15, 2013
EU::புலிகளின் செயற்பாட்டாளர்களை பின்தொடரும் சர்வதேச பொலீசார்-அதிர்ச்சி தகவல்!
 
புலிகளின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்டு வரும் முக்கிய நபர்களை சர்வதேச காவல்துறையினர் பின்தொடர்வதாகவும் கண்காணித்துவருவதாகவும்  தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புலிகள் அமைப்புக்காக கடந்த காலங்களில் நிதி சேகரிப்பிலும் போராட்டங்களை முன்னின்றும் நடத்திவந்த சிலரது பட்டியலை சர்வதேச காவல்துறையினர் தம்வசம் வைத்துள்ளதோடு குறிப்பிட்ட நபர்களின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பிலும் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துவருவதோடு பலரது தொலைபேசி அழைப்புக்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவங்கள் பெரும்பாலும் நோர்வே,பிரான்ஸ்,யேர்மனி,நெதெர்லாந்து,பிரித்தானியா போன்ற நாடுகளிலேயே  இடம்பெற்றுவருகின்றது.

ஏற்கனவே கனடா,அவுஸ்ரேலியா,பிரான்ஸ்,யேர்மனி,சுவிஸ்,நோர்வே மற்றும் நெதெர்லாந்து போன்ற நாடுகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக புலிகள் ஆதரவு செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்,பின் அதில் பலர் விடுதலையாகியுள்ளனர்.

சர்வதேச பொலீசாரின்  நடவடிக்கை இலங்கை அரசுடன்  இரகசிய வேலைத்திட்டம் ஒன்றை புலிகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ளார்கள் .

No comments:

Post a Comment