Monday, April 15, 2013

தாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் உதயன் சி.சி.ரி.வி காமராக்கள் இயங்கவில்லை: காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன!

Monday, April 15, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் அமைந்து உதயன் நாளிதழின் பிரதான காரியாலயம் மீது தாக்குதல் இடம்பெற்றமை குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
தாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் காரியாலயத்தில் இருந்த சி.சி.ரி.வி பாதுகாப்பு காமராக்கல் செயலிழந்திருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் கஸ்தூரியால் வீதியில் அமைந்துள்ள உதயன் பிரதான காரியாலயத்தில் நேற்று அதிகாலை வேளை ஆயுதம் தரித்த 3 பேர் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.
 
இதன்போது, அச்சு இயந்திரங்கள் சிலவற்றிற்கும், அச்சுக்காக பயன்படுத்தப்படவிருந்த காகிதாதிகள் தொகையொன்றும், விநியோகத்திற்கு தயாராகவிருந்த நாளிதழ்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக உதயனின் உதவி ஆசிரியர் ஆர்.சிவராஜ் தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உதயன் நாளிதழ் மீது 1987 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 25 தடவைகளுக்கு மேல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
 
கடந்த 3 ம் திகதி கிளிநொச்சியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய நிகழ்வு பாரிய ச
ம்பவமாக கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment