Wednesday, April 17, 2013
இலங்கை::வன்னியில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பாக அவதூறு ஏற்படுத்தும் வகையில் உதயன் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டமையினால் அந்த பத்திரிகை மீது வன்னி மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பீ. உதயராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர், அரசாங்கத்தின் கல்வி வேலைத்திட்டத்திற்கு அமைய வன்னியில் உள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் உதயன் பத்திரிகை, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டிருந்தது.
வன்னியில் உள்ள மக்களை மாடுகள், வேடுவர்கள் என சித்தரிக்கும் வகையில் உதயனில் செய்திகள் வெளியாகி இருந்தது எனவும் வன்னி மக்கள் அந்த பத்திரிகைக்கு எதிராக அண்மையில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் உதயராசா கூறியுள்ளார்
No comments:
Post a Comment