Wednesday, April 24, 2013

புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Wednesday, April 24, 2013
இலங்கை::புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.
 
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நேற்றையதினம்  புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்ட்டரை சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வாரணி இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேலும் 23 பேர் பேர் கலந்துக் கொண்டிருந்தனர். அவர்களே இந்த முறை வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கிடையில் ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாவில்லை.
 
இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமை  தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமத்தளான் பிரதேசத்தில் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.            

No comments:

Post a Comment