Monday, April 22, 2013

மேற்கத்தேய செல்வந்த நாடுகள் ஆசிய நாடுகளின் சமாதானத்தை குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது!

Monday, April 22, 2013
இலங்கை::மேற்கத்தேய செல்வந்த நாடுகள் ஆசிய நாடுகளின் சமாதானத்தை குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
பெருந்தோட்டத்துறை அமைச்சரும், மனித உரிமைகள் பிரதிநிதியுமான மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஆசிய நாடுகள் சமாதானத்துடன் அமைதியாக இருந்து வந்தன. எனினும் மேற்கத்தேய நாடுகள் இலங்கை போன்ற அமைதியான நாடுகளில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
 
இதன் மூலம் அந்த நாடுகள் சுயலாபம் அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதன் அடிப்படையிலேயே இலங்கை மீதும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்கமுற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment