Monday, April 22, 2013

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 80 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Monday, April 22, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 80 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் நேற்று அதிகாலை பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள கடற்பரப்பில் கைப்பற்றியிருந்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 18 பெண்களும் 24 சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் இன்று பருத்திதுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment