Monday, April 15, 2013

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக கொள்ளப்பட்டவரின் மகள் உட்பட 4 பேர் கைது!

Monday, April 15, 2013
இலங்கை::மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் கணவன் - மனைவி தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதியின் மகள் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த 17 பொலிஸ் குழுக்கள் இந்த கொலை தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

48 வயதான தந்தை மற்றும் 41 வயதுடைய தாய் ஆகிய தம்பதியினர் கடந்த 8ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த கட்டில் ஒன்றில் மீதிருந்து இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தம்பதியின் 16 வயதான மகள் அவரி்ன் காதலர் மற்றும் மேலும் இரண்டு நண்பர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தம்பதியினரை நினைவிழக்கச் செய்வதற்காக உணவுடன் ஒரு வகை வில்லைகளை சந்தேகநபர்கள் கலந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவியின் காதலர் உள்ளிட்ட குழுவினர் த
ம்பதியினரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment