Sunday, April 21, 2013

இலங்கை கடற்படையால் கைதான, 2 மீனவர்கள் விடுவிப்பு!

Sunday, April 21, 2013
மண்டபம்::மண்டபத்தில் இருந்து, நான்கு அகதிகளை, இலங்கைக்கு, அழைத்து சென்றது தொடர்பாக, இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே, முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, நாட்டுப்படகு மீனவர்கள் சிவபாலன், முனீஸ்வரன். இருவரும், இலங்கை அகதிகளான, மூன்று பெண்கள் உட்பட, நான்கு பேரை, கடந்த மார்ச், 3 ம்தேதி, இலங்கைக்கு, அனுமதியின்றி படகில் அழைத்து சென்றனர்.
இலங்கை கடற்படையினர், இருவரையும் கைது செய்து, மன்னார் போலீசில் ஒப்படைத்தனர்.
 
வவுனியா கோர்ட்டில், மார்ச்,4 ம்தேதி ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பில் தங்கியுள்ள, மீனவர்கள், இன்று(21ம் தேதி) விமானம் மூலம், மதுரை வருகின்றனர்.

No comments:

Post a Comment