Monday, April 22, 2013

லண்டன் மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீரர் அனுருத்த இந்ரஜித் குரே 14வது இடத்தை பெற்றுள்ளார்!

Monday, April 22, 2013
லண்டன்::லண்டன் மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீரர் அனுருத்த இந்ரஜித் குரே 14வது இடத்தை பெற்றுள்ளார்.
 
இந்த போட்டியில் உலகளாவிய ரீதியாக சுமார் 35 ஆயிரம் வீரர்கள் பங்குகொண்டனர்.
 
இந்த மாபெரும் போட்டியிலேயே இலங்கை வீரர் இந்ரஜித் குரே 14வது இடத்தை பெற்றுள்ளார்.
 
இந்த லண்டன் மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் 
பெற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பெறுபேறாகவும் இது அமைந்துள்ளது. 
 
போட்டியின் முதலாம் இடத்தை எத்தியோப்பிய வீரரும், இரண்டாம் இடத்தை கென்ய வீரரும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment