Saturday, March 2, 2013

இலங்கை நிலவரத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது - மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி!

Saturday, March 02, 2013
சென்னை::இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தை மத்திய அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தியா முடிவு செய்யும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment