
சென்னை::இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரன் உயிரை காக்க வலியுறுத்தி மதிமுகவினர், கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கடந்த 27ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் மதிமுக பொதுச்செயலாளர் (புலி)வைகோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவருடன் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஷீமாபஷீர், மாநில தேர்தல் பிரிவு செயலாளர் மனோகரன், மகளிர் அணி செயலாளர் குமாரி விஜயகுமாரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது, வைகோ அளித்த பேட்டி: முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று 26 நாட்களாக செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிருக்கு எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படலாம். அவர் மரணத்திற்கு தமிழகம் பலியாகி விடக்கூடாது. திறந்தவெளி முகாமிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் (புலி)வைகோ.
No comments:
Post a Comment