Thursday, June 7, 2012

பொன்சேகா, சேனக ஹரப்பிரியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Thursday, June 07, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரின் செயலாளரான ஓய்வுபெற்ற கெப்டன் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான சேனக ஹரப்பிரிய டி சில்வா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தமது கட்சிக்காரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிட்டார்.

இராணுவத்தை விட்டுச்சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கியமை, அரசாங்கத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை சீர் குலைப்பதற்கு சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா மற்றும் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்குமாறு இந்த வழக்கின் முதலாவதும், மூன்றாவதும் சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் விடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment