
இலங்கை::போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கு மீண்டும் சிறை நீடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 28ம் திகதி மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மல்லாகம் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது 5 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 மீனவர்களின் சிறை 7வது முறையாக நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment