
அம்பலாங்கொடை, கரன்தெனிய நகரில் இனந்தெரியாத நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபரினால் நேற்றிரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கிக் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரன்தெனிய வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியர் தனது மருந்தகத்தில் இருந்த போதே துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment