Monday, September 28, 2015

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது!

Monday, September 28, 2015
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களை மேம்படுத்தல் ஆகியனவற்றை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்திற்கு அதவரளிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான சுயாதீன உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஊடாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் காட்டும் முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் பொறிமுறைம நிறுவப்பட்டால் மெய்யான நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment