Wednesday, September 30, 2015

சந்திரிகாவை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Wednesday, September 30, 2015
இலங்கையில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் 2 பேருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 1999ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சந்திரிகாவின் பாதுகாவலர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். சந்திரிகாவின் ஒரு கண் பறிபோனது. அவர் உள்பட 80 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உதவியதாக வேலாயுதம் வரதராஜா, சந்திரா ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், அவர்கள் தாக்குதலுக்கு உதவி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், வேலாயுதத்தற்கு 290 ஆண்டுகளும், சந்திரா ரகுபதிக்கு 300 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment