Wednesday, December 3, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியல் சாசனத் திருத்தங்களுடன் கூடிய தேர்தல் கொள்கைப் பிரடகனம்!

Wednesday, December 03, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியல் சாசனத் திருத்தங்களுடன் கூடிய தேர்தல் கொள்கைப் பிரடகனம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

எதிர்வரும் 8ம் திகதி இந்த கொள்கைப் பிரடகனம் வெளியிடப்பட உள்ளதாக ஐக்கிய மக்
கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை முக்காலக்கொள்கை” என இந்த கொள்கைப் பிரடகனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கொள்கைப் பிரகடனத்தை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கைப் பிரகடனம் புத்திஜீவிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, இறுதி ஆவணம் தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பங்கேற்க உள்ள பிரதான கூட்டங்கள் தொடர்பிலும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் ஜனாதிபதி 66 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment