Saturday, August 16, 2014

தடை செய்யக்கோரி கோஷம் :'புலிப்பார்வை' படவிழாவில் புலிகள் ஆதரவாளர்களுக்குள் மோதல்-கைகலப்பு!!


புலிப்பார்வை' படவிழாவில், மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். படத்தை தடை செய்யக்கோரி கோஷம் போட்டார்கள். இதைத்தொடர்ந்து மோதல்-கைகலப்பு நடந்தது.
டவிழா புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை கருவாக வைத்து, 'புலிப்பார்வை' என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை பிரவின்காந்த் டைரக்டு செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில் மத்திய இணை மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மாணவர் முற்போக்கு அணியை சேர்ந்த சிலர் எழுந்து நின்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு இந்த படத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறினார்கள். அதுபற்றி தனியாக பேசிக்கொள்ளலாம் என்று அவர்களை படக்குழுவினர் சமாதானப்படுத்தினார்கள்.
மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'இது புலிகளுக்கு எதிரான படம்'' என்றும், ''படத்தை தடை செய்ய வேண்டும்'' என்றும் கோஷம் போட்டார்கள்.

அடிதடி-மோதல்

அதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல்-கைகலப்பு நடந்தது. அதில் மாறன், செம்பியன், பிரபா பிரதீப் ஆகிய 3 பேர் காயம் அடைந்தார்கள். போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை பிடித்து வேனில் ஏற்றி சென்றார்கள்.

No comments:

Post a Comment