Thursday, December 5, 2013

ராஜிவ் காந்தி கொலையாளி பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு!

Thursday, December 05, 2013
சென்னை:: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட ராஜிவ் காந்தி கொலையாளி பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் பாது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில், குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார்.
 
ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தியாகராஜன் வாக்குமூலத்தில் சேர்க்காமல் திருத்தம் செய்துள்ளார். இதனை அவரே தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். தடா நீதிமன்ற நீதிபதி தியாகராஜனிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

1 comment: