Monday, September 30, 2013

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் அக்கரைப்பற்று மாநகர சபை கட்டிடத் தொகுதி திறப்பு விழா!

Monday, September 30, 2013
இலங்கை::உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை (நவீன வளாகம்) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அதிதிகளாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மாநகர முதல்வர்,பிரதி முதல்வர் உட்பட மாநகர உறுப்பினர்கள உள்ளிட்ட அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்படுவதையும் பிரதம அதித நினைவுப் படிவத்தைத் திரைநீக்கம் செய்து வைத்து அவதானிப்பதையும், அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைப்பதையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment