Sunday, June 30, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்!

Sunday, June 30, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 4ம் திகதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடததப்படவுள்ளது.

No comments:

Post a Comment