Saturday, April 20, 2013இலங்கை::அவுஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள், அவர்களுக்கான சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பகிறது.
அவுஸ்திரேலியா இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் படகு ஒன்றின் மூலம் அகதிகளாக சென்ற 66 பேருள், 39 பேர் கடந்த வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டனர்.
அவர்கள்நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் சட்டத்தரணி ஊடாக அவர்கள் நேர்மையான அகதிகள் என்பதை நிரூபிக்க வாய்ப்பளித்திருக்கப் பட வேண்டும்.
எனினும் இலங்கையர்கள் விடயத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment