Tuesday, April 30, 2013

நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை!

Tuesday, April 30, 2013
இலங்கை::நைஜீரிய கடல் பரப்பில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களில்  இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.
 
எனினும் குறித்த கப்பலில் 14 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
நைஜீரியாவுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் தாங்கிக் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடந்த 25ஆம் திகதி கைப்பற்றினர்.
 
கப்பலுக்குள் பிரவேசித்த கடற்கொள்ளையர் 5 மாலுமிகளையும் கப்பலில் இருந்த பெருந்தொகையான பணத்தினையும் கைப்பற்றிய நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் இலங்கையர்கள் மூவர் இருப்பதாக முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.
எனினும், தற்போது கிடைந்த செய்திகளின் படி கடத்தப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment