Wednesday, April 10, 2013

தற்போதைய அரசாங்கம் போலியான அரசியல் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் மாயைகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி ஆட்சிக்கு வரவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, April 10, 2013
இலங்கை::தற்போதைய அரசாங்கம் போலியான அரசியல் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் மாயைகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி ஆட்சிக்கு வரவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
இதன்போது, கடந்த வருடத்திற்கான மத்திய வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டது.
 
சிறிலங்கா சுதந்திர கட்சி தேர்தலுக்காக மக்கள் ஆதரவை திரட்டும் 'நீல அலைகள்' வேலைத்திட்டத்தின் கீழ் கட்சி ஆதரவாளர்களை தெளிவூட்டும் நிகழ்வும் நேற்று ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
 
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிறக்காத எதிர்கால சந்ததிக்காக நாட்டை கட்டியெழுப்புவதற்கு தமது அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment