Monday, April 8, 2013

யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் பலி!

Monday, April 08, 2013
இலங்கை::யாழ். முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட்  நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று  காலை 10 மணியளவில் தமது பணியை மேற்கொண்டிருந்தவேளை பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக அவ்விடத்திற்கு ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சக பணியாளர்கள் விரைந்தபோது குறித்த பணியாளர் வெடி ஒன்றில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

அமுக்க வெடியில் சிக்கி கிளிநொச்சியைச் சேர்ந்த கே. முருகவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் சக பணியாளர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment