Saturday, April 20, 2013
சென்னை::திமுக தலைவர் கருணாநிதியுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடீரென்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார். கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.
இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment