Friday, April 5, 2013

முன்னாள் யாழ். மாநகர சபையின் (புலி)கூட்டமைப்பு) உறுப்பினர் நிசாந்தன் மீது தாக்குதல்?

Friday, April 05, 2013
இலங்கை::முன்னாள் யாழ். மாநகர சபையின் (புலி)கூட்டமைப்பு)   உறுப்பினர் நிசாந்தன் மீது தாக்குதல்!
 
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக   யாழ். மாநகர சபையின் (புலி)கூட்டமைப்பு)  முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்தார்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஆயுத முனையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக முன்னாள் (புலி)கூட்டமைப்பு)  மாநகர சபை உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு சென்றிருந்த போது வெள்ளவத்தையில் வைத்து தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகவும் அங்குள்ள கோழிக்கடை ஒன்றில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டு ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டதாகவும்

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் மற்றும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தன்னைக் கடத்தி ஆயுத முனையில் 5 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் கேபில் கம்பிகளினால் தாக்கியதாக நிசாந்தன் தனது மேலாடையைக் கழற்றி ஊடகவியலாளர்களுக்கு காட்டினார்.

தன்னை அரசியலில் இருந்து ஒதுங்குமாறும் அவ்வாறு ஒதுங்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் உயிர் பறிக்கப்படும் என கடும் தொனியில் எச்சரிக்கை செய்யப்பட்டதாக அவர்  (புலி)கூட்டமைப்பு) நிசாந்தன் மேலும் தெரிவித்தார். 
(புலி)கூட்டமைப்பு)  நிசாந்தன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment