Friday, April 19, 2013
சென்னை::ஒன்றிணைந்த பேச்சுவார்த்தைகள் மூலமாகவே இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய காங்கிரஸ் டக்சியின் சிரேஷ்ட்ட தலைவர் மணிசங்கர் ஐயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பி.டீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தம்மால் கூடிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது.
அனைத்து தரப்பினரும் இணைந்து முழுமையான பேச்சவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும்.
எனினும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் லாபங்களுக்காக காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment