Monday, April 29, 2013

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாறுபட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது!

Monday, April 29, 2013
சென்னை::இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாறுபட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக இலங்கையர்கள் தமிழகத்திற்கு வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த விடயத்தில் எழும்பூர் மகா போதி மடத்தை சேர்ந்த கலவான மஹானாம தேரர் தலையிட்டு, இலங்கையில் இருந்து அதிகளவிலானவர்களை தமிழகத்திற்கு விஜயம் செய்வதற்கான, அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வர்த்தக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது தவிர, விசேட மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழ்நாடு வரும் இலங்கையர்கள் தற்போது, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment