Friday, April 5, 2013

தமிழீழம் வேண்டாம்: மாணவர்கள் போராட்டம் வேண்டாம்: கத்தோலிக்க கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

 Friday, April 05, 2013
இலங்கை::இலங்கையில் தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்தை, இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் கட்சிகள் நிராகரித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லியில் கடந்தவாரம் சர்வகட்சி மாநாடு ஒன்று நடைபெற்றது
இதில் அ.தி.மு.க தரப்பில் ஜெயலலிதா ஜெயராம் கலந்துக் கொண்டு தனி ஈழகருத்தை முன்வைத்துள்ளார்.
எனினும் பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட ஏனைய எந்தக் கட்சிகளும் இந்த கருத்துக்கு ஆதரவளிக்கவில்லை  என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக கத்தோலிக்க சபையிடம் இலங்கையின் கத்தோலிக்க கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்
30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்புகளுக்கு ஏற்படக்கூடாது.
தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment