Sunday, September 30, 2012
பீஜிங்::ஊழல், செக்ஸ் புகாரில் சிக்கிய சீன தலைவர் போ ஷிலாயின் பதவிகள் பறிக்கப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் போ ஷிலாய். செல்வாக்கு மிக்கவர். அடுத்த பிரதமர் என்ற அளவில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்நிலையில் அவர் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் எழுந்தன. இங்கிலாந்து தொழிலதிபர் நெயில் என்பவரை கொலை செய்ததில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ‘பிரபல சீன நடிகை ஷாங் ஷியிக்கு அரசியல் செல்வாக்கு உள்ள தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. போ ஷிலாய்க்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த உறவின் மூலமாக ஷியி ரூ.530 கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ளார்’ என சீன பத்திரிகையில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து போ ஷிலாய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சீன பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு வாரத்தில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. சீனாவில் மாசே துங் தலைமையிலான புரட்சியின் மூலம் மக்கள் சீன அரசு அமைக்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான விழா 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், போ ஷிலாயின் பதவிகள் பறிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது அபாண்டமாக புகார் கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ஷியி கூறியுள்ளார். ஹாங்காங்கில் வசித்து வரும் இவர் கிரவுச்சிங் டைகர், கிட்டன் டிராகன் உள்பட பல படங்களில் நடித்தவர்.
No comments:
Post a Comment