
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசியலுக்குள் மதத்தை நுழைக்க முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் வங்குரோத்து நிலையை மூடிமறைப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அரசியலுக்கு இழுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க வழிகோலியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கபிலவஸ்து புனிதப்பண்டத்தை ஒருபோதும் ஆளும் கட்சி பயன்படுத்தப்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் இடம்பெறும் மாகாணங்களில் மட்டுமன்றிவேறும் மாகாணங்களிலும் கபிலவஸ்து புனிதப் பண்டம் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment