




இலங்கை::சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 29) இலங்கை வந்துள்ளனர்.
ஜெனரல் லியாங்கு குவாங்லி தலைமையிலான இவ் உயர் மட்டக்குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்துநாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இவர்கள் சபுகஸ்கந்தையிலுள்ள பாது காப்பு சேவைகள், அதிகாரிகள் கல்லூரி, பனாகொட இராணுவ முகாம் ஆகிய வற்றுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளனர்.
No comments:
Post a Comment