Monday, July 02, 2012இலங்கை::குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்குவேட்பாளர் பட்டியலில் இடமளிக்க வேண்டாம் என இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகம், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம்அளிக்க வேண்டாம் என நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் பெபரல் கோரியுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் மக்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பெபரல ;அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கல்வித் தகமை, அரசியல் நோக்கம்,நன்னடத்தை மற்றும் சமூக அந்தஸ்து ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment