Wednesday, July 25, 2012

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் ஹெராயின் ஏர்போர்ட்டில் பறிமுதல்: இருவர் கைது!

Wednesday,July 25, 2012
மீனம்பாக்கம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் புறப்பட தயாரானது. அதில், ஏற வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள், சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த தன்வர் முகமது (35), மபின் நிசார் (32) ஆகியோர், இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னைக்கு நேற்று மாலை வந்து விட்டு இன்று அதிகாலையில் புறப்பட இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.

அப்போது, இருவரது ஆசன வாயிலிலும் சிறிய பொட்டலம் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். கருப்பு கார்பன் பேப்பரில் சுற்றி வைத்திருந்த அந்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தனர். அதற்குள், 500 கிராம் ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் போதை பொருளை கொடுத்து அனுப்பியது யார், போதை கடத்தும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment