Thursday, July 26, 2012

வடக்கு கிழக்கின் 4 வைத்தியசாலைகளை விருத்தி செய்ய 60 மில்லியன் ரூபா நிதியுதவி!

Thursday, July 26, 2012
இலங்கை::வடக்கு கிழக்கில் உள்ள 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய அமெரிக்காவின் மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு 60 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய போதனா வைத்தியசாலைகள், கிளிநொச்சி ஆதார வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

அமெரிக்கா நிறுவனத்தின் இந்த நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் சுகதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு சுகாதார அபிவிருத்திக்காக நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment