Friday, June 29, 2012

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்!

Friday, June, 29, 2012
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனித் தமிழீழதீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் இரண்டு பக்கங்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைதீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை, சோபித தேரர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டு வரும் சுமூகமான சூழ்நிலையை குழப்பக் கூடியஎந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர், இந்திய பிரதமரிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment