Monday, April 30, 2012

சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது!

Monday, April, 30, 2012
இலங்கை::சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது!

இலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பான ஆவணப் படங்களை வெளியிட்ட பிரித்தானியாவின், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளுடன் சம்பந்தப்பட்டது என இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஸ்டுவர்ட்; கோஸ்த்ரேவ் இங்கிலாந்தில் வசித்து வரும் ஷிராணி சபாரட்னம் என்ற பெண்ணையே மணமுடித்துள்ளதாகவும் அந்த பெண் புலம் பெயர் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக கூறி, பல முறை இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் எந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் யூ.கே தொலைக்காட்சியில் ஷிராணி சபாரட்ணம் பணியாற்றி வருகிறார் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment