
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியதன் அவசி யத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி வழங்குமென அவர் தெரிவிக்கிறார்.
சர்வதேச நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 33 அமர்வில் பங்கேற்கும் முகமாக கொழும் பிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.
உலகிலுள்ள அனைத்து பாராளு மன்றங்களுக்கும் இதனைவிட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனதும் தமது கட்சியினதும் எண்ணமென ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு பாராளு மன்றத்தினூடாக தீர்வினைப் பெற வேண்டிய அவசியம் தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment