
நாவலப்பிட்டி, கலபொட பிரதேசத்தின் உப தபால் அலுவலகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கிடைத்த தகவலுக்கு அமைய தபால் நிலையத்திலிருந்து சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாவலப்பிட்டி தெகித பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment