Friday, September 30, 2011

45 இலங்கை மீனவர்கள் விடுதலை

Friday, September 30, 2011
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 45 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 35 பேர் ஒக்டோபர் நான்காம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களின் ஏழு படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 10 மீனவர்கள் நாளை நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இரண்டு படகுகளையும் தமிழக அதிகாரிகள் விடுவித்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விடுதலையான மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இந்தியக் கரையோர பாதுகாப்பு படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைவடையவுள்ளது.

இந்த மீனவர்களையும் அவர்களது எட்டு படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment