
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரொயின் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது!
பஹ்ரேனிலிருந்து ரூ.20 லட்சம் பெறுமதியான 284 கிராம் ஹெரொயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இவர் 58 வயதுடைய பாகிஸ்தானிய பிரஜை எனவும், பாகிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றியவர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவர் 58 வயதுடைய பாகிஸ்தானிய பிரஜை எனவும், பாகிஸ்தான் ஹோட்டல் ஒன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றியவர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment