
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்வது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக, அமெரிக்க காங்கிரஸ் குழு வாக்களித்துள்ளது.
இலங்கையில், யுத்தத்தின் பின்னர் போதிய மீளமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதற்காக இந்த பிரேரனை முன்வைக்கப்பட்டது.
வாய்மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவு குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், மனிதாபிமான ரீதியான உதவிகள், கண்ணி வெடி அகற்றல், ஜனநாயகம் மற்றும் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான உதவிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ஹொவார்ட் பெர்மன் தலைமையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிதியாண்டில் இருந்து அமுலாகவிருப்பதாக ஏ.எப்.பி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எமது செய்திசேவை இலங்கை வெளியுறவு அமைச்சை வினவியது
அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அமரிக்க காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தீhமானம் தொடர்பில் செய்திகள் மூலமே தெரிந்து கொள்ளமுடிந்தது என்று தெரிவித்தார்
இந்தநிலையில் இது தொடர்பில் உண்மை நிலையை அறிய வெளியுறவு அமைச்சு அமரிக்காவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை தொடர்புகொண்டிருப்பதாகவும அவர் கூறினார்
No comments:
Post a Comment