Pages

Tuesday, April 8, 2014

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தமிழர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது: புலி பினாமி கஜேந்திரகுமார்!

Tuesday, April 08, 2014
இலங்கை::ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் 2002ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்புடைய குற்றங்களை விசாரிக்கும்படி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துக்கு கூறப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முன்னர் இடம்பெற்ற, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்கக்கூடியதல்ல.

அமெரிக்கா இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டு வருவதன் நோக்கம் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவல்ல. மாறாக இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே என்றும் இந்தக் கருத்தையே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்களின் நிலைப்பாடு. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும், தமிழர்களுக்கு (புலிகள்) எதிராக இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்து குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமாகவிருந்தால் நாம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கே செல்ல வேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
முக்கிய குறிப்பு புலிகள் எவரையும் கொலை செய்யவில்லையாம்-புலி பினாமி கஜேந்திரகுமார்!

No comments:

Post a Comment