Pages

Tuesday, April 8, 2014

சவூதி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள 20 பேரின் சடலங்களை அனுப்ப நடவடிக்கை!

Tuesday, April 08, 2014
இலங்கை::20 இலங்கையர்களது சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பி வைப்பதற்காக  சவூதி அரேபியாவிலுள்ள சவச்சாலைகளின் வைக்கப்பட்டுள்ளதாக அராப் நியூஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலங்களில் 75 சதவீதமானவை  30  வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் அந்தச்   செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சவூதிஅரேபியாவில் தொழில் புரியும் இலங்கையர்களில் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் இறப்பதாகவும் இவர்களில் அதிகமானோர் இயற்கையாக உயிரிழப்பதாகவும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக பேச்சாளரொருவர் தெரிவிப்பதாகவும் அராப் நியூஸ் செய்தி தெரிவிக்கின்றது. இன்றைய நிலையில் சவூதிஅரேபியாவில் 4,50,000 இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் இவர்கள் பெரும்பாலோனோர் வீட்டுப் பணிப் பெண்களாக கடமையாற்றுவதாகவும் அது தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment