Thursday, January 16, 2014

மனித உரிமை விவகாரங்களுக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஆர்வம்: அமெரிக்கா!

Thursday, January 16, 2014  
இலங்கை::மனித உரிமை விவகாரங்களுக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஆர்வம் காட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மனித உரிமை விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள துணைப் பேச்சாளர் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.

சகல தரப்பினருடனும் இணைந்து நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க தூதரகமும் அறிவி;த்துள்ளது.

நல்லிணக்க முனைப்புக்களில் அனைத்து தரப்பினரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது ன தெரிவித்துள்ளது.
  
 

No comments:

Post a Comment