Pages

Saturday, June 14, 2014

புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது!

Saturday, June 14, 2014
புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
 
ஐந்து  புலி  உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலி உறுப்பினர்களுக்கு 10 முதல் 16 ஆண்டு வரையிலான காலப்பகுதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  புலிச் சந்தேக நபர்கள், பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அச்சுறுத்தி புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் நெதர்லாந்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment